உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும்’

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும்.

சட்டவிரோதமாக போதைப்பொருட்களை நாட்டிற்கு எடுத்து வருவதை தடை செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் எவராயினும் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் சமூக சேவையாளர்கள் 120 பேருக்கு சமாதான நீதவான் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் தலதா அத்துகோரள இதனை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க