உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல்: வாக்குமூலம் பெற அனுமதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சூழ்ச்சி தொடர்பில் சிறைக் கைதிகள் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

வெலிகடை மற்றும் அக்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 5 சிறைக்கைதிகளிடம் இவ்வாறு வாக்குமூலம் பெற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட கோரிக்கை ஒன்றை கருத்திற் கொண்டு பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இம்மாதம் 26ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் 6 பேருக்கு அங்கு வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்ள நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கருத்து தெரிவிக்க