முத்துவல் பகுதியில் தாயொருவர் தனது குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் குறித்த தாய் குழந்தை கீழே விழுந்துள்ளதாக தெரிவித்து ஒன்றரை மாத குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளார்.
இதன் போதே குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குடும்ப பிணக்கு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தை கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாய் தற்போது பொலிஸாரின் காவலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க