உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 2 ஆயிரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக மீனவர்கள் சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

“தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 200 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

அந்த வழியே வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

கடல் எல்லையை கடந்து வந்து மீன்பிடித்தனர் என கூறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

அதனுடன் படகுகளில் சென்ற 2 ஆயிரம் மீனவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க