உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

விபத்தில் மகன் மற்றும் தந்தை பலி!

எல்ல – கம்பரகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு (17) பல்லகெடுவயிலிருந்து பிடபொல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி சுமார் 350 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அவரின் 3 பிள்ளைகள் சிகிச்சைக்காக தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி 35 வயதான தந்தையும் 8 வயதான மகனும் உயிரிந்துள்ளனர்.

ஹெலபுபுல பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

12 மற்றும் 8 வயதான சிறுவர்கள் இருவரும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க