உள்நாட்டு செய்திகள்புதியவை

கந்தளாயில் சூறைக்காற்று: மின்கம்பங்கள் சேதம்

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தின் நகரில்நேற்று இரவு 7.30 மணியளவில் வீசியசூறைக்காற்றில் நகரின் மத்தியில் உள்ள இலங்கை வங்கி அலுவலகத்திற்கு முன் இருந்த இரண்டு பழங்கால மரங்கள் அடியோடு சாய்ந்ததில் வீதியோர மின்கம்பங்கள் பாதிப்படைந்துள்ளது .
இதனால் நேற்று இரவு முதல் கந்தளாய் நகரில் மின்தடை ஏற்பட்டது.

மேலும் சுமார் 2 மணித்தியாலயங்கள் நகரின் மத்தியில் வாகன நெரிசல் காணப்பட்டது. மேலும் திருகோணமல கண்டி வீதியில் பயணிக்கும் வாகனங்கள் காலதாமதமாகவே நகரின் வீதியை கடக்கநேரிட்டன.

துண்டிக்கப்பட்ட மின்சாரமானது இன்று மாலைக்குள் வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் திருகோணமலை காரியாலயம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க