உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் கடும் மழை; வெள்ளத்தில் மூழ்கியது வீதிகள்

வவுனியாவில் இன்று (17.08) காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நீர் வழிந்தோடி செல்லும் வடிகானில் நீர்பாசன திணைக்களத்தின் குழாய்கள் காணப்படுவதினால் (குறித்த குழாய்களினுள் கழிவுகள் அடைத்த நிலையில் காணப்படுகின்றது) நீர் வழிந்தோடி செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கின்றது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் நீரில் முழ்கியுள்ளது.

அத்துடன் கூமாங்குளம், நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக வரட்சியான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் நேற்றையதினமும் இன்றும் பெய்து வரும் மழை காரணமாக மக்கள் மகிழ்வடைந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க