உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது’ சுமந்திரன்

தமிழ் மக்களுக்கு உாித்தான காணிகளை 2018ம் ஆண்டு மாா்கழி மாதத்திற்குள் மக்களிடம் மீள வழங்குவேன் என ஜனாதிபதி கூறி 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்களுடைய நிலம் தொடா்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.

பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

2018ம் ஆண்டு மாா்கழி மாதத்திற்கு காணிகள் அனைத்தும் மக்களிடமே மீள வழங்கப்படும் என ஜனாதிபதி காலக்கெடு வழங்கினாா். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதுள்ளது.

சுமாா் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருந்து கொண்டிருக்கின்றது. மேலும் குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் புறமாக பெருமளவு நிலம் தொடா்ந்தும் படையினாின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த நிலம் பொதுமக் களுக்கு சொந்தமான மிக பெறுமதியான விவசாய நிலம் ஆகும்.

தொடா்ந்து நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறுகையில், பலாலி வீதியின் கிழக்கு புறமாக உள்ள மக்களுடைய நிலத்தில் படையினர் விவசாயம் செய்கின்றாா்கள்.

இது எங்களுடைய பொருளாதார விருத்திக்கு முரணான ஒரு செயலாக அமைகின்றது. அது மட்டுமல்லாமல் மயிலிட்டி பகுதியில் 3 கிராமசேவகா் பிாிவுகளும், வல்லை அராலி வீதியும் விடுவிக்கப்படவேண்டும் என சுட்டிக்காட்டினாா்.

இதனை தொடா்ந்து யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி கருத்து கூறுகையில் பலாலி வீதியின் கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்க 1200 மில்லியன் பணம் தேவை என கூறியதுடன் அந்த பணம் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க