உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வவுனியாவில் உணவு பாதுகாப்பு செயலமர்வு

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் உணவு பாதுகாப்பு உணவு சுகாதாரம் தொடர்பான செயலமர்வு நேற்று 2மணியளவில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பசுபதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நகரிலுள்ள உணவகங்களின் பாதுகாப்பு சுகாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக உணவக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம். மகேந்திரன், பிராந்திய பொது சகாதாரப்பரிசோதகர் எஸ்.ரவீந்திரன், மாவட்ட உணவு மருத்துவப்பரிசோதகர் பார்த்தீபன், தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் ஜெயரதன், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சிவபாலன், வவுனியா வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள், உணவு கையாளும் நிலைய உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் வவுனியா நகரிலுள்ள உணவகங்களில் காணப்பட்ட சுகாதாரமற்ற நிலைமைகளை பரிசோதனை மேற்கொண்டு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்து தெரிவிக்க