உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபர் கைது

தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் 2 ஆவது தலைவரது மகன் அம்பாறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை புறநகர் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை(16) இந்த கைது இடம்பெற்றுள்ளது .

கைதானவர் வயது 16 மதிக்கத்தக்க குருநாகல் ஹெக்குனுகொல்ல பகுதியை சேர்ந்த முஹமட் நௌபர் அப்துல்லா என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானினால் நுவரெலியாவில் நடாத்திச் செல்லப்பட்ட இராணுவ பயிற்சியில் இணைந்து கொண்டு பயிற்சியை மேற்கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தற்கொலை தாக்குதலில் இறந்த சஹ்ரானிற்கு அடுத்த நிலை தலைவராக மௌலவி முகமட் நௌபர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க