உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘இலவச பாடநூல்களை வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்’

2020ம் ஆண்டுக்கான இலவச பாடநூல்களை வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் இடம்பெற்றது.

2019ம் ஆண்டு இறுதி தவணை பாடசாலை நிறைவடைவதற்கு முன்னர் மாணவர்களுக்கு 2020ம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்குவதற்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் வழிகாட்டல்களும் வழங்கப்படவேண்டுமென கல்வியமைச்சரினூடான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சகல தேசிய பாடசாலைகள் மற்றும் ஆயிரத்து 500க்கும் அதிக மாணவர்களை கொண்ட மாகாண பாடசாலைகளுக்கு நேரடியாக கல்வி வெளியீட்டு திணைக்களத்தினூடாக பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

ஏனைய சகல பாடசாலைகளுக்கும் 2020ம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் நாடு முழுவதுமுள்ள மாவட்ட அலுவலகங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விநியோக மத்திய நிலையத்தினூடாக பாடப்புத்தகங்களை பெற்றுக்கொள்ள முடியுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க