உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

விபத்து; மூவர் உயிரிழந்ததுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

தம்புள்ளை – ஹபரண வீதியின் குடாகஸ்வெள பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

சிற்றுந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே நேற்று இரவு 10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து குறித்து மேலதிக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க