உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மாதம்பிட்டியவில் இருவர் கொலை: ஆயுதங்களுடன் மூவர் கைது!

மாதம்பிட்டிய பகுதியில் வைத்து இரண்டு பாதாள உலக உறுப்பினர்கள் நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் மட்டக்குளிய பகுதியில் 2 வாள்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில், மாதம்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் நேற்று (15) இருவர் கூரான ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் சென்ற சிலர் மற்றுமொரு முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயங்களுக்குள்ளான குறித்த இருவரும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆனமாலு ரங்க என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க