உள்நாட்டு செய்திகள்புதியவை

பாலர் பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து விபத்து!

நிட்டம்புவ பகுதியில் பாலர் பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து எதிர்திசையில் வந்த 6 வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது .

குறித்த பேருந்து கட்டுப்பாட்டையிழந்த நிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது 2 மகிழுந்து , 2 மோட்டார் சைக்கிள் , சிற்றூர்தி மற்றும் முச்சக்கர வண்டியுடன் பேருந்து மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நிட்டம்புவ பகுதியில் இன்று காலை 7.45 மணியளல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க