கிழக்கு செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று (15) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தசாப்த கால போராட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை எதுவித பதிலும் வழங்காத நிலையில் சர்வதேசமாவது நியாயமான பதிலை கூற வேண்டும் எனக் கோரியே இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கோரப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் கண்துடைப்பா? வெள்ளை வேனில் கொண்டு சென்றவர்கள் எங்கே? என எழுதப்பட்ட வசனங்கள் அடங்கிய பதாகைகளுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க