உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கம்பஹாவில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கம்பஹா மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு இன்றும் நாளையும் (15, 16) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36 858 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், தமது சூழலைத் துப்புரவாக வைத்துக் கொள்ளுமாறும் டெங்கு ஒழிப்புப் பிரிவு, மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க