உள்நாட்டு செய்திகள்புதியவை

உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து இந்தியர் உயிரிழப்பு

லொக்கள் ஓயா பயோமாஸ் மின் உற்பத்தி நிலைய கட்டிடத்தில் (Biomass power plant building) இருந்து விழுந்து இந்திய பொறியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பெங்களூரில் வசிக்கும் 55 வயதான வி.ராமையா ரெட்டப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த கட்டிடத்தின் சுமார் 20 அடி உயரமுள்ள இடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் பொறியாளர் விழுந்ததாக நம்பப்படுகிறது.

காட்டிடத்தில் இருந்து மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கருத்து தெரிவிக்க