உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

6 பேருடன் நடத்தப்பட்ட அமைச்சரவைக்கூட்டம்

இலங்கையின் அமைச்சரவைக்கூட்டத்தி;ல் குறைந்தளவான தொகையில் பஙகேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் காலை 7.30க்கு ஆரம்பமானது.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐந்து அமைச்ச்களும் மாத்திரமே அதில் பங்கேற்றனர்.

இதனையடுத்து அடுத்த கிழமையில் இருந்து காலை 8.30க்கு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்தார்.

இலங்கையின் அமைச்சரவையில் 28 பேர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க