உள்நாட்டு செய்திகள்புதியவை

24 மணிநேர தேடலில் 147 சாரதிகள் கைது

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி முதல் மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட திட்டத்தின் கீழ் இதுவரை 8635 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க