உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை’

பாதுகாப்பு அமைச்சில் கடைமை பணிபுரிந்த இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று (14) அதிகாலை 4.10 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ வீரர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலன்னறுவை, அத்தனகடவல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த இராணுவ வீரர் இராணுவ தலைமையகத்தின் பொறியியல் பிரிவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க