உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தமிழர் நலனுக்காக அனைத்து தரப்புக்களுடனும் இணைய தயார்!

தமிழ் மக்கள் நலனுக்காக அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் இணைந்து செயற்பட தமிழரசுக் கட்சி எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தவ்தாவ்து,

நாம் தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் எப்போதும் ஒற்றுமையுடன் அடிப்படை தேவைகளை வென்றெடுக்க போராடி வருகின்றோம்.

தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் தமிழ் தரப்புக்கள் ஒருமித்து மக்களுக்கு அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க ஓர் கொள்கையை வகுக்க வேண்டும் என கோரிக்கைகள் வருகின்றன.

இதனை நாம் எப்போதிலிருந்தோ வலியுறுத்தி வருகின்றோம்.

தற்போது கூட தமிழ் மக்கள் அபிலாசைகளை நிறைவேற்ற தமிழ் தரப்புக்கள் அனைவரும் ஒன்னினைந்து செயற்பட தயாராகவே இருக்கின்றோம்.

தமிழ் தரப்புக்கள் அனைத்தும் உங்கள் கொள்கைகள் உங்கள் கருத்துகளில் விலகாது தமிழ் மக்கள் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து மக்களுக்கு தேவையாக உள்ள அடிப்படை விடயங்களை நிறைவேற்ற ஒன்றினைவோம் அதற்கு எனது கட்சி தயாராகவே உள்ளது.என்றார்.

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கு என்னென்ன செய்யவுள்ளோம் என சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக சொல்லக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும்.

அத்துடன் தேர்தலில் போட்டியுடவுள்ள அனைத்து தரப்புடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தவ்தாவ்து,

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.கட்சிகள் தங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார் என அருமுகப்படுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவர்களை இரகசியமாக சந்தித்தனர் அவர்களை இரகசியமாக சந்தித்தனர் என சிலர் புரளிகளை கிளப்பி வருகின்றனர்.

அவர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.தேர்தல் ஒன்று வரும் போது பல தராவ்ப்புகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்புக்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

அவர்களில் தமிழ்மக்களுக்கு நாம் என்னென்ன தேவை என கோருகின்ற போது அவற்றை நாம் செய்வோம் என சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக துணிந்து சென்று கூறக் கூடிய தரப்புக்கு நாம் ஆதரவு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என்றார்.

கருத்து தெரிவிக்க