உள்நாட்டு செய்திகள்புதியவை

பிரதமரின் தீர்மானத்துக்கேற்ப முடிவெடுப்போம் : சித்தார்த்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமது கட்சி விலகாதென புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பில் இருந்து புளொட் விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தர்மலிங்கம் சித்தார்த்தன் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்க அழைத்திருந்தார். இதன்போது, அவர் தாம் ஆட்சிக்கு வந்தால் 13ஆவது திருத்தச் சட்டம் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தார்.

தென்பகுதி மக்களின் வாக்குகளால் மட்டும் தன்னால் வெற்றிபெற முடியும் என்றும் எல்லா மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருக்கவே தாம் விரும்புவதாகவும் அதற்கு தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை எனவும் அவர் கோரினார்.

எவ்வாறெனினும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தனக்குத் தேவையில்லை என்று அவர் கூறவில்லை.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளராக பிரதமர் ரணில் எடுக்கும் முடிவை பொறுத்து நாம் முடிவெடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க