வெளிநாட்டு செய்திகள்

தன்சானியாவில் அனர்த்தம்: 57 பேர் உயிரிழப்பு

தன்சானியா நாட்டில் பெற்றோல் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளாக்கியதில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்சானியா நாட்டின் தலைநகரான டார் எஸ் சலாம் பகுதியிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள மொரோகோர என்ற இடத்தில் இன்று ஒரு பெற்றோல் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளாகி வீதியில் கவிழ்ந்தது.

இதையடுத்து குறித்த கொள்கலன் வெடித்துச் சிதறியதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு பயங்கரமான தீக்காயங்களுடன் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கருத்து தெரிவிக்க