உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்குமாறு ரணிலுக்கு கட்சிக்குள் அழுத்தம்

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்காக நாடாளுமன்றக்குழுவை கூட்டுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரவுள்ளனர்.

இந்த தகவலை கட்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தாம் கடிதம் ஒன்றை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையில் சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜெயசூரிய ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க