உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கிளிநொச்சியில் நால்வர் மீது திடீர் தாக்குதல்

கிளிநொச்சி முரசு மோட்டை மருதங்குளம் பகுதியில் வயல் காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கமக்கார அமைப்பினரால் காணி உரிமையாளரான பெண் ஒருவர் உட்பட மூவர் பேர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் காணி உரிமையாளரான பெண் ஒருவர் இம்முறை சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் அதனை நேற்று அறுவடைசெய்து கொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திடீரென காணிக்குள் அத்துமீறி உட்புகுந்த முரசுமோட்டை கமக்கார அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டோர்

குறித்த நால்வரையும் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க