உள்நாட்டு செய்திகள்புதியவை

அவன்ட் கார்ட் வழக்கு: நால்வருக்கு விளக்கமறியல்

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கில் நான்கு சந்தேக நபர்களை ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காலி தலைமை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (ஆகஸ்ட் 9) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் 4 வது சந்தேகநபர் விக்டர் சமரவீர, (ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவர்) 5 வது சந்தேக நபர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பியாசிரி பெர்னாண்டோ, 6 வது சந்தேக நபர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கே.பி. அதிகாரி எகொடவெல, மற்றும் 7 வது சந்தேக நபர் சமன் திசானாயக ஆகியோருக்கே விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது, கைது செய்யப்பட்ட திசாநாயக்க, தற்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக  நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க