உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘மாக்கந்துரே மதூஸை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை’

மாக்கந்துரே மதூஸை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

குறித்த நபர் பாதாள உலகக்குழுத் தலைவர் என்பதுடன் இவர் தடுப்பு காவல் உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது கொலை முயற்சிக்கான சூழ்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துரே மதூஸ் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 5ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவர் 90 நாட்களுக்கு மேல் தடுப்பில் உள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க