உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

புதூர் பகுதியில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்!!

வவுனியா புதூர் புதுவிளாங்குளம் பகுதியில் இருந்து மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம் ஒன்றினை இன்று மாலை முன்னெடுத்திருந்தனர்.

மாலை 5.30 மணியளவில் புதூர் சந்திக்கு அண்மையில் ஒன்றுகூடிய பொதுமக்கள் எ9 வீதியில் இருந்து புதூர் செல்வதற்கான பிரதானவீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்… எமது பிரதேசத்தின் மண் வளம் அனுராதபுரம் உள்ளிட்ட வேறு மாவட்டங்களிற்கு கொண்டு செல்லபடுகின்றது. எமது பகுதிகளில் வீடு கட்டுவதற்கு மணல் இல்லாமல் நாம் இருக்கிறோம். மண்ணை அள்ளிசெல்லும் வாகனங்களால் குறித்த வீதி குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.

எனவே இந்த வீதியால் மணல் ஏற்றி செல்வதை தடுப்பதுடன் எமது பகுதியில் உள்ள வளத்தை நாமே பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் வளங்களை சுரண்டாதீர்கள், கனரக வாகனம் செல்லும் பாதை இல்லை இது,எமது வளத்தை எமக்கு தா போன்ற பதாதைகளை தாங்யிருந்ததுடன் கோசங்களும் எழுப்பியிருந்ததுடன் மணல் ஏற்றுவதற்கு சென்ற டிப்பர் வாகனம் ஒன்றையும் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க