உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுபவர்களை இனம் காணுமாறு பொலிஸில் முறைப்பாடு’

சாமிமலை கிலனுஜி தோட்டம் டீசைட் தோட்ட பிரிவில் தேயிலை மலைகளில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர்களை இனம் காணுமாறு கோரி தோட்ட முகாமையாளரால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் கடந்த 5/8/2019 அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவது கடந்த சில தினங்களாக இனம் தெரியாத நபர்கள் இரவு நேரங்களில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,தெரியவந்துள்ளது.

இரவு நேரங்களில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வருவதால் நபர்கள் யார் என்று தெரியவில்லை என்றும் எனவே இவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் சம்பந்தமாக காவல் துறையினர் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் சந்தேக நபர்களை விரைவில் இனம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஸ்கெலிய காவல்துரையினர் தெரிவிக்கின்றனர் .

கருத்து தெரிவிக்க