உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘கமநலஅபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 105 வேலைத்திட்டங்கள்’

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கமநலஅபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 105 வேலைத்திட்டங்கள் சுமார் 130.42 மில்லியன் ரூபாசெலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கமநலஅபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் அவர்கள் தெரிவிததுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவிஆணையாளர்; கருத்துத்தெரிவிக்கையில், தற்போது தமது திணைக்களத்தின் ஊடாக 105 வேலைத்திட்டங்கள் 130.42 மில்லியன் ரூபாசெலவில் முன்னெடுக்ப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின்ஊடாக சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் மற்றும உவர் நீர்த்தடுப்பணைகள் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கமநல அபிவிருத்திணைக்களம் ஊடாக வாய்க்கால் புனரமைப்புக்காக 18 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏனைய அபிவிருத்தி வேலைகளுக்காக 5.2 மில்லியன்ரூபாவும் விவசாய வீதிகள் வாய்க்கால்களை புனரமைப்பதற்கு 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊழியர் நிதியத்தின் ஊடாக நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைப்பதற்கு 17.22 மில்லியன் ரூபாவும் உள்ளடங்கலாக ஏனைய வேலைகளுக்குமாக இவ்வாறு 130.42 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்று அதற்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க