Uncategorizedஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் கைது

அனுமதியின்றி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 120 வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த ஒரு தொழிலதிபர் கட்டுகஸ்தோட்டை பொலீஸ் ஊழல் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை- இனிகளவில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த நிலையிலேயே இந்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சிகரெட்டுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, கண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க