உள்நாட்டு செய்திகள்

கோட்டாவுடன் ‘டீல்’ – மன்னிப்பு கோருமாறு அமைச்சர்களுக்கு அழுத்தம்!

” கோட்டாபய ராஜபக்சவை இரகசியமாகச் சந்தித்த அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும்.” என்று இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா வலியுறுத்தினார்.

” ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம், அலரிமாளிகையின் பிரதானி சாகல ரட்னாயக்க ஆகிய அமைச்சர்கள் கோட்டாபயரை இரகசியமாக சந்தித்து, கலந்துரையாடியுள்ளனர்.

கோட்டா உள்ளிட்டவர்களை இவர்களே பாதுகாக்கின்றனர் ;என்பது தற்போது உறுதியாகியுள்ளது. சிலவேளை ஆட்சிமாற்றம் ஏற்பட்டால்கூட பதவிகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு இருபக்கங்களும் கால் வைக்கின்றனர்.

இதனால் கிராமங்களில் உள்ள ஐ.தே.க. ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே, அமைச்சர்கள் இருவரும் உடனடியாக மன்னிப்புகோர வேண்டும்.” எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

 

கருத்து தெரிவிக்க