உள்நாட்டு செய்திகள்புதியவை

முன்னாள் தளபதிகளுக்கு பதவி உயர்வு!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் இலங்கை விமானப்படை முன்னாள் தளபதி மார்ஷல் ரோஷான் குணதிலக ஆகியோருக்கு மிக உயர்ந்த ராணுவ அணிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, 2005 முதல் 2009 வரை கடற்படைத் தளபதியாக பணியாற்றிய வசந்த கரன்னாகொட, கடற்படையின் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்.

அதே நேரம் விமானப்படைத் தளபதியாகவிருந்த ரோஷான் குணதிலக மார்ஷல் பதிவிக்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

இவர் 2006 முதல் 2011 வரை விமானப்படைத் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க