உள்நாட்டு செய்திகள்புதியவை

மின்சார வீண்விரயத்தை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை

நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை காரணமாக மின்சாரத்தை வீண் விரயம் செய்வதைத் தவிர்க்குமாறு மின் மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெப்பம் காரணமாக மின் நிலையங்களைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளதாக அமைச்சின் முகாமையாளர் சுலக்ஷன ஜெயவர்தன சுட்டிக்காட்டினார்.

அக்டோபர் அல்லது நவம்பர் வரை வெப்பம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மின்சாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க