உள்நாட்டு செய்திகள்புதியவை

உருகுனை பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்கு விளக்கமறியல்

உருகுனை பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவர்கள் விஞ்ஞான பீடத்துக்கு பொறுப்பானவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எலியகண்ட மாணவர் விடுதியில் சில புதியவர்கள் பகிடிவதை செய்யப்பட நிலையில் முன்னறிவித்தல் இன்றி சோதனை நடத்தப்பட்ட பின்னர் அவர்கள் குறித்த பிரிவுக்கு பொறுப்பானவரை அச்சுறுத்தியிருந்தனர்.

இதேவேளை மீள் அறிவிப்பு வரும் வரை விஞ்ஞான பீடம் ஜூலை 31 முதல் மூடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க