உள்நாட்டு செய்திகள்புதியவை

கனேடிய பிராந்திய தலைமை காவல் அதிகாரியாக இலங்கையர்

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பீல் (Peel) பிராந்தியத்தின் தலைமை காவல் அதிகாரியாக முதன்முறையாக இலங்கை தமிழர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹால்டன் பிராந்தியத்தில் பிரதி பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பாவை பீல் பிராந்தியத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமித்துள்ளனர்.

ஒன்டாரியோ பிராந்தியத்திற்கு நியமிக்கப்பட்ட முதலாவது தென் ஆசிய தலைமை காவல் அதிகாரி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க