உள்நாட்டு செய்திகள்புதியவை

‘விபத்துக்களை குறைக்க புதிய திட்டம் வேண்டும்’

பொதுப் போக்குவரத்து சேவையை மிகவும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சாரதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்து சாரதியின் அலட்சியமே என்பது தெரியவந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் 60ற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க