உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உதவிய மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு வெடிப்பொருட்களை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

இவர்களுக்கு விளக்கமறியலை குளியாப்பிட்டிய நீதிமன்றம் இன்று எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடித்தது.

இந்த மூவர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை அடுத்து விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டது.

இதேவேளை 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் இருவர் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர்கள் என்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

கருத்து தெரிவிக்க