உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

25 லட்சம் பெறுமதியான புதிய மோட்டகிரைன்டர் கையளிப்பு!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு 25 லட்சம் பெறுமதியான புதிய மோட்டகிரைன்டர் இன்று கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி அவர்களால் குறித்த மோட்டகிரைன்டர் இன்று தவிசாளரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க