உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘மீண்டுமொரு தாக்குதல் இடம் பெற வாய்ப்பில்லை’ – சுமித் அத்தபத்து

இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கைக்கு இலங்கை இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதரகம் தமது நாட்டுக் குடிமக்களுக்கு விடுத்துள்ள இரண்டாம் நிலை எச்சரிக்கை குறித்து, பிரிகேடியர் சுமித் அத்தபத்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, “மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை எமக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

அவ்வாறான தகவல்கள் கிடைத்தால், அது குறித்து மக்களுக்கு அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படாத வகையில், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் பிரிகேடியர் சுமித் அத்தபத்து பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க