உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

 காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் வழக்கு ஒக்டோபரில்

யாழ்ப்பாணம், நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் கவனத்தில் இருப்பதால், இன்று எடுத்துக்கொள்ளக் கூடாது என நாவற்குழி இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான மற்றும் இராணுவத் தளபதி சார்பாக ஆஜரான சேத்திய குணசேகர தெரிவித்தார்.

மனுதாரர்கள் சார்பான ஆஜரான சட்டத்தரணி கு.குருபரன், எஸ்.சுபாசினி ஆகியோர், இது தொடர்பாக மனுதாரர்களுக்கு அறிவித்தல் தரப்படவில்லை என சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க