உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அபிவிருத்திகுழு கூட்டத்தில் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

வவுனியா அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரண்பட்டுக்கொண்ட சம்பவம் இடம்பெற்றது.

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் சிவனை வணங்க ச்செல்லும் வழியில் படிகள் அமைப்பதற்கு அனுமதி கோரி வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது வனவளத்திணைக்களத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் குறித்த படிக்கட்டுகளை அமைப்பதற்கு காவல்துறை மூலம் தொடர்ந்தும் தடைவிதித்துவருவதாகவும் அதன் பிரகாரம் படிக்கட்டுகளை அமைக்கமுடியாதுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந் நிலையில் பிரதேச செயலாளர் மாகாணசபையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டே படிகள் செய்யப்பட்டுள்ளதால் அதனை அமைக்க அனுமதிக்கவேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து அபிருத்திகுழுவில் முடிவெடுப்பதாகவும் அரசாங்க அதிபர் உடனடியாக கலாசார அமைச்சருக்கு கடிதம் மூலம் குறித்த சம்பவத்தை அறியப்படுத்தவேண்டும் எனவும் முடிவெடுக்கப் பட்டு அதன் நிமிர்த்தம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசாவை சந்தித்து கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்,

இதன்போது குறுக்கிட்ட வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசியல் அமைப்புபோல் அதற்கும் காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்,

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவ்வாறு கதைக்காதீர்கள் நீங்கள் எதை கூறவருகின்றீகள் என்பது எமக்கு தெரியும் எனவே விடயத்திற்கு வாருங்கள். இப்போது அரசியல் அமைப்பு பற்றி கதைக்க தேவையில்லை என தெரிவித்தார்.

இவ்வாறு இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க