உள்நாட்டு செய்திகள்புதியவை

ஏசல பெரஹர பாதுகாப்புக்கு 7௦௦௦ காவல்துறை அதிகாரிகள் குவிப்பு

கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையின் ஏசல பெரஹராவின் போது 7.000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளனர் என்று காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தார்.

இதேவேளை, மத விழாவை முன்னிட்டு ஓகஸ்ட் 5 முதல் 15 வரை இந்த பகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கலால் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கண்டி, பேராதெனிய , கட்டுகஸ்தோட்ட, அலதேனிய, அம்பதென்னை, கடவத்சதர, மற்றும் கங்காவத்த, கோறளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மதுபான கடைகள் இந்த காலகட்டத்தில் மூடப்பட உள்ளன.

மேலும், மடவளை, மெனிகின்ன, திகன, மற்றும் தலத்துயோயாவிலும் உள்ள மதுபான கடைகள் மூடப்படும் என்று காவல்துறை குறிப்பிட்டது.

கருத்து தெரிவிக்க