உள்நாட்டு செய்திகள்புதியவை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் காணொளி பதிவு செய்த நேற்று (ஜூலை 31) பல்கலைக்கழக மாணவரை பலங்கொட நீதவான் நீதிமன்றம் ஓகஸ்ட் 6 வரைவிளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் காணொளி பதிவிற்காக குறித்த பல்கலைக்கழக மாணவர் மற்றும் வெளி நபர் உட்பட இருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், ஒரு நபர் ரூ .50 ஆயிரம் பிணையில் விடுவிக்கப்பட்டார், மற்ற சந்தேக நபர் ஓகஸ்ட் 6 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அம்பாறை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சமனலவேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க