உள்நாட்டு செய்திகள்புதியவை

யாழ்ப்­பாணம், கொழும்புக்கிடையே தொடரூந்து சேவை­கள் அதி­க­ரிப்பு

கொழும்­புக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் இடையில் தினமும் இடம்­பெற்று வரும் தொடரூந்து சேவைகள் எதிர்­வரும் 3ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆறு சேவை­க­ளாக அதி­­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட புதிய தொடரூந்துகளைகளை யாழ்ப்­பா­ண சேவையில் ஈடு­ப­டுத்­த தொடரூந்து திணைக்­களம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் இது­வரை காலமும் நடை­மு­றை­யி­லி­ருந்த 4 தொடரூந்துகளை சேவைகள் 3 ஆம் திகதி சனிக்­கி­ழமை முதல் ஆறு சேவை­க­ளாக இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இத­ன­டிப்­ப­டையில் உத்­த­ர­தேவி புகை­யி­ரத சேவைக்கு அடுத்­த­தாக புதிய தொடரூந்துகளை சேவை யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

பிற்­பகல் 1.45 மணிக்கு இடம்­பெறும் குளி­ரூட்­டப்­பட்ட நகர்சேர் கடு­க­திக்குப் பின்னர் மாலை 5.45 மணிக்கு காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்து கொழும்­புக்கு மற்­று­மொரு தொடரூந்து சேவையும் இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­லையில் இரவு தபால் புகை­யி­ரதம் காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்து 7.45 மணிக்கு புறப்­பட்டு இரவு 8.10 மணிக்கு யாழ்.மத்­திய புகை­யி­ரத நிலை­யத்தை வந்­த­டைந்து கொழும்­புக்குப் புறப்­படும்.

தற்போது கொழும்பிலிருந்து இரவு 8.30 மணிக்கு யாழ்.நோக்கிப் புறப்படும் இரவு தபால் புகையிரதம் இரவு 9 மணிக்கு யாழ்.நோக்கி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க