புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் “துருணு திரிய” கடனுதவி நிகழ்வு

”துருணு திரிய” இளம் தொழில் முனைவோர்க்கான இலங்கை வங்கியின் கடன் திட்டத்தினூடாக இன்று(31.07.2019 ) முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 06 தொழில் முனைவோரிற்கான கடன் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மேற்பார்வை உத்தியோகத்தர் ப.தர்மேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இலங்கை வங்கியின் உடைய புதுக்குடியிருப்பு முகாமையாளர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.

இத்திட்டத்தின் ஊடாக இது வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 22 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர் என தெரியவருகின்றது.

இன்று கடன் வழங்கப்பட்டவர்களுடன் மொத்தமாக 28 பேருக்கு கடன் திட்டத்தின் ஊடான நன்மைகள் கிடைத்திருக்கின்றன.

கருத்து தெரிவிக்க