உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது.

இன்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்தியாரத்ன சாட்சி வழங்கவுள்ளார்.

அதேநேரம் இராணுவ தளபதி லெஃப்டினன் ஜெனரால் மஹேஸ் சேனாநாயக்கவும் மீண்டும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க