உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

திருட்டு மோட்டார் சைக்கிள்களுடன் இருவர் கைது!!

திருட்டு மோட்டார் சைக்கிள்களுடன் இரண்டு பேரை கைதுசெய்துள்ளதாக வவுனியா குற்ற தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்திவைக்கபட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அது தொடர்பான விசாரணைகளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிசார் மேற்கொண்டு வந்தனர்.

இதற்கமைய வவுனியா குற்ற தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர் நிஜாமின் தகவலிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வவுனியா  கோவில்குளம் பகுதியில் வைத்து நேற்றய தினம்  கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கபடும் மூன்று மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் நேற்று நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க