வெளிநாட்டு செய்திகள்

பிரேசில் சிறைக் கைதிகளுக்கிடையில் கைகலப்பு ! 57 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் வடபகுதியில் உள்ள அல்டாமிரா நகர் சிறையில், ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த கொமாண்டோ  வெர்மெலோவுக்கும் கொம்னடோ கிளாஸ் ஏ என்ற இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.

நேற்றுக் காலை இந்த இரு குழுக்களுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது. கொமாண்டோ வெர்மெலோ குழுவினர் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கூரைக்கு மற்றைய குழு தீ வைத்ததை தொடர்ந்து, கத்திகளுடன் இரு குழுக்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர்  கலவரத்தைக் கட்டுப்படுத்தினர்.

50 இற்கும் மேற்பட்ட கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும் கலவரத்தில் 57 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 16 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க