உள்நாட்டு செய்திகள்புதியவை

செப்டெம்பர் 07 தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் பேரணி!

செப்டெம்பர் 07 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணிதிரளுங்கள் என தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் மையக் குழுக் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள், தொடர்பில் ஊட­க அறிக்கை வெளியாகியுள்ளது.

இதில் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்ற சிங்கள, முஸ்லிம் முற்போக்கு அமைப்புக்களும் கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவிக்கப்படாதுள்ளது. இந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் அவலத்தை உலகறியச் செய்வோம் என குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஒவ்வொருவரின் வரவும் நிச்சயம் சர்வதேச சமூகத்திடம் மிகப்பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் செப்டெம்பர் 7 ஆம் திகதி பேரலையாய் எழுந்து பேரணியில் கலந்து கொள்ளுங்கள் என தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க